வேட்பாளர்களிடம் திமுக ரூ.60 லட்சம் வசூல்: தேர்தல் கமிஷனிடம் அதிமுக புகார்
டெல்லி:
தேர்தல் விதிமுறைகளை மீறி ஒவ்வொரு வேட்பாளர்களிடமும் திமுக தலைமை ரூ.60 லட்சம் வாங்கியுள்ளதாகத்தலைமைத் தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் தெரிவித்துள்ளது.
இந்தப் புகாரை தலைமைத் தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தியிடம் அதிமுகவின் பொருளாளர்திண்டுக்கல் சீனிவாசன் எம்.பி. கொடுத்தார். அதில், தேர்தல் நிதியாக கடந்த ஜூன் மாதத்திலேயே திமுக தனதுகட்சித் தொண்டர்களிடம் ரூ.25 கோடி வசூலித்துவிட்டது.
பின்னர் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவர்கள் தேர்தல் செலவுகளுக்காக ரூ.60 லட்சம் கட்ட வேண்டும் என்றுகட்சிப் பத்திரிக்கையான முரசொலியில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 15 வேட்பாளர்களும் பணம் கட்டியுள்ளனர்.
அதே போல பணம் கட்டிய ஆலடி அருணா, தனக்கு சீட் கிடைக்கவில்லை என்று தெரிந்த பின்பு பணத்தைத்திரும்பப் பெற்றுக் கொண்டதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ஒரு தொகுதிக்கு ரூ.25 லட்சம் மட்டுமே செலவிடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.எனவே, வேட்பாளர்களிடம் திமுக ரூ.60 லட்சம் வாங்கியது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயலாகும். ஆகவேதிமுக மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தொகுதிக்குத் தொகுதி அமைச்சர்கள் வந்து முகாமிட்டு பணத்தை கடல் தண்ணீராய் செலவிட்டுவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications