இரு சக்கர வாகனதாரர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய கோரி வழக்கு
சென்னை:
இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நுகர்வோர் அமைப்பின் தலைவர் தேசிகன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
தேசிய நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.தேசிகன் இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடர்ந்த பொது நலன் மனுவில், இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இரு சக்கரவாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பல வெளிநாடுகளிலும் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும்தான் இதுநடைமுறையில் இல்லை.
இரு சக்கர வாகனங்களில் செல்வோரின் உயிரை மதித்து அவர்கள் ஹெல்மெட் அணிவதை கட்டாயமாக்க தமிழகஅரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர், இது தொடர்பாக விளக்கம்அளிக்குமாறு கூறி தலைமைச் செயலாளர், போக்குவரத்துத் துறைச் செயலாளர், காவல்துறை தலைவர் (டிஜிபி)ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications