ஜல்லிக்கட்டை தடை செய்ய விலங்குகள் நல வாரியம் கோரிக்கை
சென்னை:
ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என்று விலங்குகள் நல வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
வாரியத்தின் தலைவர் நீதிபதி குன்மான் லால் லோதா செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜல்லிக்கட்டுநிகழ்ச்சியின்போது காளைகள் அதிக அளவில் துன்புறுத்தப்படுகின்றன. பல காளைகளுக்கு மது கொடுக்கப்பட்டுஅவை சிரமத்திற்கு ஆளாக்கப்படுகின்றன.
தமிழகத்தில் விலங்குகள் வதைச் சட்டம் வாபஸ் பெறப்பட்டிருப்பது தவறானதாகும். இந்த சட்டம் இல்லாததால்,விலங்குகள் வதையை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் வாரியம் உள்ளது.
இந்தியாவில் பசு மாட்டின் சிறுநீரை மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இது புற்றுநோய் உள்பட 100க்கும் மேற்பட்ட நோய்களுக்கு நல்ல மருந்தாகும் என்று இந்திய அறிவியல் மற்றும் தொழில்ஆய்வுக் கழகம் கூறியுள்ளது. இது தொடர்பான மருந்துக்கு அமெரிக்க காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது என்றார்அவர்.