இரு நாள் ஓய்வுக்குப் பின் மீண்டும் ஜெ. பிரசாரம்
சேலம்:
சேலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரசாதம் தருமாறு அறநிலையத் துறைஅதிகாரி உத்தரவிட்டதால், கோவில் பூசாரிகள் பல மணி நேரம் கொளுத்தும் வெயிலில் கால் வலிக்க நிற்கும் நிலைஏற்பட்டது.
சேலத்தில் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா எல்.என்.ஆர். எக்ஸலன்சி ஹோட்டலில் தங்கினார். அவருக்குபிரசாதம் தர வேண்டும் என சேலத்தின் முக்கிய கோவில்களுக்கு அறநிலையத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து காலையிலேயே சிறப்புப் பூஜைகளை முடித்துக் கொண்டு அர்ச்சகர்கள் பிரசாதங்களுடன்ஹோட்டலுக்கு ஓடி வந்தனர். அதையெல்லாம் ஒரே ஒரு அர்ச்சகரிடம் தந்து ஜெயலலிதாவின் அறைக்கு போலீசார்அனுப்பி வைத்தனர். இதனால் மற்ற அர்ச்சகர்கள் ஏமாற்றத்துடன் வெளியிலேயே நின்றனர்.
இந் நிலையில் சுகனேஸ்வரர் கோவிலின் அர்ச்சகர்கள் தாமதமாக வந்தனர். அவர்களை ஹோட்டலுக்குள் போலீசார்அனுமதிக்கவில்லை.
கடும் வெயிலில் நிறுத்தப்பட்ட அவர்கள் நெடுநேரம் போலீசாரிடம் உள்ளே விடுமாறு கெஞ்சிக் கொண்டேஇருந்தனர். கடைசி வரை விடாததால் பிரசாதத்தை போலீசார் மூலமே ஜெயலலிதாவுக்கு அனுப்பி விட்டுவேதனையுடன் திரும்பிச் சென்றனர்.
இந் நிலையில் இரு நாட்கள் ஓய்வுக்குப் பின் இன்று முதல் ஜெயலலிதா மீண்டும் தனது சூறாவளிப் பிரச்சாரத்தைத்தொடங்குகிறார்.
இதுவரை சென்னை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் பகுதிகளில் பிரச்சாரப் பயணத்தை முடித்துவிட்டஅவர் சேலத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமை (இன்று) ஓய்வெடுத்தார். இந் நிலையில் அவரது 7வது பிரச்சாரம்இன்று மாலை தொடங்குகிறது.
சேலம், நாமக்கல் ஆகிய பகுதிகளில் இன்றும், திருச்செங்கோடு, ஈரோட்டில் நாளையும் அவர் பிரசாரப் பயணம்மேற்கொள்கிறார்.












Click it and Unblock the Notifications