அமைச்சரின் கார் மீது தாக்குதல்: புதிய தமிழகம் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கருப்பசாமி, தென்காசி அதிமுக வேட்பாளர் முருகேசன் ஆகியோர் சென்றகார்கள் மீது தாக்குதல் நடத்தியதாக 11 புதிய தமிழகம் தொண்டர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
தென்காசி தொகுதி வேட்பாளர் முருகேசனை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக அதிமுகவினருடன் அமைச்சர்கருப்பசாமி சென்று கொண்டிருந்தார். அமைச்சர், வேட்பாளர் மற்றும் அதிமுகவினரின் கார்கள் நெல்லைமாவட்டம் கீழநீலிதநல்லூர் என்ற இடத்தில் வந்தபோது அங்கு கூடியிருந்த புதிய தமிழகம் தொண்டர்கள் கார்கள்மீது கல்வீசித் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது தொடர்பாக அதிமுகவினர் கொடுத்த புகாரின் பேரில்புதிய தமிழகத்தைச் சேர்ந்த 11 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications