பொடாவில் கைதான ஷாகுல் அமீது ஜாமீனில் விடுதலை
சென்னை:
பொடா சட்டத்தின் கீழ் கைதாகி ஒரு வருடமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழர் தேசிய இயக்கத்தைச்சேர்ந்த ஷாகுல் அமீதுவை ஜாமீனில் விடுதலை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆனந்த் தியேட்டர் வளாகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கூட்டம் போட்டதாகக் கூறி கடந்தஆண்டு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் உள்ளிட்டவர்கள் பொடா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் ஷாகுல் அமீதுவும் கைது செய்யப்பட்டார்.
தங்களை ஜாமீனில் விடக் கோரி நெடுமாறன் உள்ளிட்டவர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்தபோது மற்றவர்களுக்குஜாமீன் கிடைத்தது. ஆனால் ஷாகுல் அமீது கைதாகி ஒரு வருடம் நிறைவடையவில்லை என்பதைக் காரணம் காட்டிஅவருக்கு மட்டும் ஜாமீன் மறுக்கப்பட்டது.
இந் நிலையில் சிறையில் ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்தார் ஷாகுல் அமீது. இதைத் தொடர்ந்து தன்னை ஜாமீனில்விடுவிக்கக் கோரி ஷாகுல் அமீது உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
அவரது மனுவை விசாரித்த நீதிபதிகள் சிர்புர்கர், இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர், ஷாகுல் அமீதுவை நிபந்தனைஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications