திருச்சியில் 2 வாலிபர்கள் தற்கொலை: ஹோமோ செக்ஸ் விவகாரம்?
திருச்சி:
திருச்சியில் ரயில் முன் பாய்ந்து இரண்டு கேரள வாலிபர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் ஹோமோசெக்ஸ் காதலர்களாக இருக்கலாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சி- திண்டுக்கல் சாலையில் ரெட்டைமலை அருகே ரயில் தண்டவாளத்தில் இன்று காலை இரண்டுஇளைஞர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இருவரின் தலைகளும், உடல்களும் துண்டு துண்டாகக்கிடந்தன. ரயிலில் விழுந்து இருவரும் தற்கொலை செய்திருக்கின்றனர். இருவரும் 25 முதல் 28 வயதுமதிக்கத்தக்கவர்கள்.
இருவரின் உடல்களையும் போலீஸார் சோதனை செய்து பார்த்தபோது, ஒருவரது சட்டைப்பையில் ஒரு கடிதம்இருந்தது.
அதில், எங்கள் சாவுக்கு யாரும் காரணமில்லை, காதல் தோல்வியால் சாகிறோம் என்று மலையாளத்தில்எழுதப்பட்டிருந்து. இதன்மூலம் இவர்கள் இருவரும் மயாைளிகள் என்பது தெரிய வந்தது. மேலும்,காரைக்குடியிலிருந்து திருச்சிக்கு வந்ததற்கான பஸ் டிக்கெட்டும் கண்டெடுக்கப்பட்டது.
இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டவர்களாக இருந்திருக்கலாம் என்று போலீஸார்சந்தேகிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications