கோவில்பட்டி: தாறுமாறாக ஓடிய வேன் மோதி 3 பெண்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே தாறுமாறாக ஓடிய பால் வேன் மோதி 3 பெண்கள் பலியாயினர்.
நெல்லையைச் சேர்ந்த கே.சி.பால் நிறுவனத்தின் வேன் ஒன்று பால் ஏற்றிக் கொண்டு வேடசந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்தது. கோவில்பட்டி பைபாஸ் சாலையில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தவேன் தாறுமாறாக ஓடியது.
சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 3 பெண்கள் பரிதாபமாகப் பலியாயினர். சிலகடைகளும் சேதமடைந்தன. விபத்திற்குப் பின் வேன் டிரைவர் தப்பி விட்டார். அவரை போலீஸார் தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications