For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கரூர்: நடுரோட்டில் நர்ஸை கட்டி பிடித்த மாணவர் கைது

By Staff
Google Oneindia Tamil News

கரூர்:

நடு ரோட்டில் வைத்து 35 வயது நர்ஸைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து விட்டு தப்பியோடிய 18 வயது கல்லூரிமாணவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கரூர் அருகே உள்ளது சங்கரமலை கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த18 வயது கல்லூரி மாணவர் சரவணன்.இவருக்கு அதே ஊரைச் சேர்ந்த நர்ஸ் ஒருவர் மீது தீராத ஆசை ஏற்பட்டுள்ளது. அவரது அழகில் மயங்கிய அவர்எப்படியாவது அவரை வீழ்த்த முடிவு செய்தார். ஆனால் நர்ஸின் வயதோ 35. இதனால் தனது ஆசையை எப்படிநிறைவேற்றுவது என்று தெரியாமல் இருந்து வந்தார்.

இந் நிலையில் சாலையில் அந்த நர்ஸ் நடந்து வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் சரவணனுக்குள் இருந்த"வாலி அஜீத்" வெளியே வந்தார். சடசடவென்று நர்ஸை நெருங்கிய சரவணன் அப்படியே அவரை கட்டிப் பிடித்துமுத்தமிட்டார். பின்னர் அங்கிருந்து ஓடி விட்டர்.

கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடந்து முடிந்த இந்த சம்பவத்தால் நிலை குலைந்த நர்ஸ் அப்படியே அமர்ந்துவிட்டார். பின்னர் சுதாரித்து எழுந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீஸார் சரவணனைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X