For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழக தேர்தல் பணிக்கு 117 வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை & தேனி:

தலைமை தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து பெரியகுளம் தொகுதியில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் தேர்தல் ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு பணிக்குநிறுத்தப்படும் போலீஸார் வாக்குச்சாவடி அமைந்துள்ள தொகுதியைச் சேர்ந்தவராக இருக்கக்கூடாது.

இந்த உத்தரவையடுத்து பெரியகுளம் தொகுதியில் 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். பழனிசெட்டிபட்டி சப்-இன்ஸ்பெக்டர் க.விலக்குக்கும், க.விலக்கு சப்-இன்ஸ்பெக்டர்பழனிசெட்டிபட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர். அதேபோல் தேவதானப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் சேதுஜெயமங்கலத்துக்கும், ஜெயமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் தேவதானப்பட்டிக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

6,500 மத்திய போலீஸார் வருகை:

இந் நிலையில் தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி 6,500 மத்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்படவுள்ளதாக தமிழக காவல்துறை டிஜிபி கோவிந்த் கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். மேலும் தேர்தலுக்கு நிறையஅவகாசம் உள்ளதால் பாதுகாப்புப் பணிகளை திட்டமிட்டு செய்ய முடியும் என்றார்.

117 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்:

ஒவ்வொரு தொகுதிக்கும் பார்வையாளர்களாக 2 ஐ.ஏ.எஸ். அதிகாரி, தேர்தல் செலவுகளை மேற்பார்வையிட ஒருஐ.ஏ.எஸ். அதிகாரி என மொத்தம் 117 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமிக்கிறது. இவர்களைஒருங்கிணைக்கும் அதிகாரியாக பாசு என்ற மேற்கு வங்காள முன்னாள் தேர்தல் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.

நியமிக்கப்பட்டுள்ள அனைவரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுவதற்கு 2நாட்களுக்கு முன்பு இவர்கள் தமிழகம் வந்து பொறுப்பேற்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X