உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சோனியா இந்தியர் தான்: கருணாநிதி
சென்னை:
தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல் திட்டத்தில் வெளிநாட்டினர் பிரதமர் பதவிக்கு வரக் கூடாது என்று குறிப்பிடவே இல்லைஎன திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மறுத்தார்.
கருணாநிதியுடம் கையெழுத்திட்ட செயல் திட்டத்தின் நகலை இன்று பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டார்.இதையடுத்து சிறிது நேரத்தில் கருணாநிதி நிருபர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
உயர் பதவிகளுக்கு யார் வரலாம், வரக்கூடாது என்று ஒரு தீர்மானத்தை செயல் திட்டத்தில் பா.ஜ.க. சேர்த்தது. ஆனால், அதில்தெளிவான குறிப்பு ஏதும் இல்லை. பொத்தம்பொதுவாக ஒன்றை சேர்த்தார்கள்.
இந்தியாவில் பிறந்த இந்தியர் தான் பிரதமர் பதவிக்கு வரலாம் என்று தெளிவாகக் குறிப்பிடவில்லை (அப்படிக் குறிப்பிட்டால்அத்வானி பிரதமர் பதவிக்கு வர முடியாது). இந் நிலையில் அதில் நானே கையெழுத்து போட்டிருந்தாலும் கூட பின்னர் வந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு என்ன கூறியது?.
சோனியா ஒரு இந்தியர் தான் என்று உச்ச நீதிமன்றம் தெள்ளத் தெளிவான தீர்ப்பு வழங்கிவிட்டது. நான் உச்ச நீதிமன்றத்தைமதிக்கிறேன். இதனால் பா.ஜ.கவுடன் இந்த விஷயத்தில் லாவணி பாடிக் கொண்டிருக்க நான் தயாராக இல்லை என்றார்கருணாநிதி.












Click it and Unblock the Notifications