தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை மீனவர்கள்
ராமேஸ்வரம்:
பலத்த கடல் காற்றில் சிக்கி திசை மாறி இலங்கை கடல் பகுதிக்குள் சென்று சிக்கித் தவித்த 4 ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கைமீனவர்கள் மீட்டு ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்தனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த பாலன், காரல் மார்க்ஸ், சாக்ரடீஸ், டல்சி ஆகிய நான்கு மீனவர்களும், புதன்கிழமை மீன் பிடிக்ககடலுக்குள் சென்றனர். அடுத்த நாளே அவர்கள் திரும்பி வந்திருக்க வேண்டும்.
ஆனால் கடலில் வீசிய கடுமையான காற்றினால் அவர்களது படகு திசை மாறி இலங்கை, நெடுந்தீவு பகுதிக்குச் சென்று விட்டது.அங்கு கடலில் அவர்கள் வழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தனர். மேலும், கடலில் வீசிய காற்று காரணமாக அவர்களதுபடகும் மூழ்கும் நிலையில் இருந்தது.
இவர்களைப் பார்த்த அப்பகுதி மீனவர்கள் உடனடியாக தங்களது படகுகளில் சென்று நான்கு பேரையும் மீட்டனர். பின்னர்அவர்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு வந்து சேர்த்தனர்.
ராமேஸ்வரம் மற்றும் இலங்கை மீனவர்களுக்கிடையே அடிக்கடி மோதல் நடந்து வரும் வேளையில் இலங்கை மீனவர்களின்இந்த மனிதாபிமான உதவியை ராமேஸ்வரம் மீனவர்கள் பாராட்டினர்.












Click it and Unblock the Notifications