2 நாட்களுக்கு சென்னை, வேலூரில் அனல் காற்று வீசும்
சென்னை:
சென்னை, வேலூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான அனல் காற்று வீசும் என நுங்கம்பாக்கம்வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இப்போதே கோடை வெயில் ஆரம்பித்துவிட்டது. நேற்று சேலத்தில் அதிகபட்சமாக 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்தகித்தது. அதே போல வேலூர், அரக்கோணத்தில் 105 டிகிரியும், மதுரை, திருச்சியில் 103 டிகிரி பாரனஹீட் வெப்பமும்பதிவாகியுள்ளது. கோவையில் 102 டிகிரி பதிவானது.
இந் நிலையில் அடுத்த இரு நாட்களுக்கு வட மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மார்ச்மாதத்திலேயே இந்த நிலை என்றால் வரும் மே மாதம் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை நிலவப் போகும் அக்னி நட்சத்திர காலகட்டத்தை நினைத்து இப்போதே தமிழகம் மிரண்டு போயிருக்கிறது.
தமிழகத்தில் மே 10ம் தேதி தான் மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு என்பது குறிப்பிடத்தக்கது. வெயில் கொடுமை அதிகமாகஇருந்தால் வாக்களிக்க வருவோரின் எண்ணிக்கையும் கணிசமாகக் குறையலாம்.