அவதூறு வழக்கு: முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக அரசு குறித்து அவதூறாக கட்டுரை எழுதியதாகத் தொடரப்பட்டுள்ள அவதூறு வழக்கில் திமுக கட்சிப் பத்திரிக்கையானமுரசொலி இதழின் ஆசிரியர் முரசொலி செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 26ம் தேதி முரசொலி இதழில், இந்து ஆங்கிலப் பத்திரிக்கையில் வெளியான கட்டுரை ஒன்றின்மொழிபெயர்ப்பு பிரசுரிக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுரை தமிழக அரசுக்கு அவப் பெயரை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகக்கூறி முரசொலி ஆசிரியர் செல்வம் மீது தமிழக அரசு அவதூறு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கின் விசாரணை 7-வது கூடுதல் குற்றவியல் நீதிபதி சம்பத் முன்னிலையில் வந்தது. அப்போது முரசொலி செல்வம்நேரில்ஆஜரானார். பின்னர் வழக்கை ஜூன் மாதம் 10ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications