அதிமுக-பா.ஜ.கவுக்கு எதிராக பழ. நெடுமாறன் பிரச்சாரம்
சென்னை:
அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியுற வேண்டும் என்று கூறியுள்ள தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், இக்கூட்டணிக்கு எதிராக தீவிர பிரசாரத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
நீண்ட காலத்துக்கு முன் காங்கிரசில் இருந்து விலகியது முதல் தமிழர் நலன், உரிமைகள் என தன் பயணத்தை வகுத்துக்கொண்டுவிட்ட நெடுமாறன் அரசியல் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
அரவது இன உரிமைப் போராட்டங்கள் காரணமாக பலமுறை சிறையைச் சந்தித்திருக்கிறார். சமீபத்தில் அதிமுக அரசால் பொடாசட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார்.
இந் நிலையில் இத்தனை ஆண்டுகளாக அவரே ஒதுக்கி வைத்திருந்த அரசியலில் மீண்டும் குதிக்கிறார் பழ. நெடுமாறன்.நேரடியாக களத்தில் இறங்காவிட்டாலும் அதிமுக-பா.ஜ,கவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.
இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதச்சார்பின்மையைக் காக்க தீவிரத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடப்போகிறேன். அதிமுக-பாஜக கூட்டணி தோல்வியைத் தழுவினாலே, பொடா போன்ற கொடிய சட்டங்கள் நிச்சயம் ரத்தாகி விடும்.
தமிழர்கள் நலன், திராவிட உணர்வுகளைக் கூர் தீட்ட திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியை வெற்றி பெறவைக்க வேண்டியது மக்களின் கடமையாகும். இந்தக் கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் ஆகியவையும்இடம் பெற்றிருக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications