இளங்கோவனுக்காக பிரச்சாரம் செய்ய வரும் பிரியங்கா
கோபிச் செட்டிப்பாளையம்:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் இளங்கோவன், கோபிச்செட்டிப்பாளையத்தில் போட்டியிடவுள்ளார். அவருக்குஆதரவாக பிரச்சாரம் செய்ய சோனியா காந்தி அல்லது பிரியங்கா கோபி வரவுள்ளனர்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இரண்டு பேர் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளனர்.மற்றவர்களின் பட்டியல் விரைவில் வரும் என்று தெரிகிறது.
கோபிச் செட்டிப்பாளையம் தொகுதியில், இளங்கோவன்தான் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. இந்தவிஷயத்தை இளங்கோவனிடமும், திமுக தலைமையிடமும் டெல்லி காங்கிரஸ் தலைமை தெரிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
தனது தேர்தல் பணிகளை ஆரம்பிக்க அவர் கோபிக்கு வந்தார். அப்போது தனக்காக கோபியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுக்கச்சொல்லி தனது ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து வீடு தேடும் வேலை நடக்கிறது.
காங்கிரஸ் தொண்டர்கள் தவிர அப் பகுதி திமுக நிர்வாகிகள்ஸ தொண்டர்களையும் சந்தித்துப் பேசிய இளங்கோவன், சிலபகுதிகளில் பிரசாரத்திலும் ஈடுபட்டார்.
அவரிடம் கோபி வேட்பாளர் நீங்கள்தான் என்பது உறுதியாகி விட்டதா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, வேட்பாளர் யார்என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். இங்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக சோனியா காந்தி அல்லதுபிரியங்கா ஆகியோரில் ஒருவர் பிரசாரம் செய்வார்கள் என்றார் புன்னகைத்தபடியே.
ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கி வரும் இளங்கோவனுக்கு சோனியாவை விட பிரியங்காவிடம் அதிக செல்வாக்குஉள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்காக பிரியங்கா பிரச்சாரத்துக்கு வருவார் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications