பிரச்சாரத்துக்காக இன்று கோவை வருகிறார் மாயாவதி
கோவை:
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரும், உத்திரபிரதேச மாநில முன்னாள் முதல்வருமான மாயாவதி தேர்தல்பிரச்சாரத்திற்காக இன்று கோவை வருகிறார்.
தனியார் விமானம் மூலம் மதியம் 12 மணிக்கு பீளமேடு விமான நிலையம் வரும் அவருக்கு கோவை மாவட்டபகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அவர் ரெசிடென்சி ஓட்டலில் தங்குகிறார்.
மாலை 6 மணிக்கு வ.உ.சி.,மைதானத்தில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். கூட்டத்திற்குப்பின் இரவு கோவையில் தங்கிறார். அவர் நாளை காலை திருவனந்தபுரத்திற்கு காரில் செல்கிறார்.
ஹிஸ்புல் முஜாகிதீன், அல்-உமர் முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல் மாயாவதிக்குஉள்ளதால் கோவை பயணத்தின் போது அவருக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்க மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குண்டு துளைக்காத காரைப்பயன்படுத்த அவர் சார்பில் கட்சியினர் போலீசுக்கு ரூ.10 ஆயிரம் செலுத்தியுள்ளனர்.












Click it and Unblock the Notifications