For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திமுகவினர் மீதான வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் அமைச்சர் இன்பத்தமிழன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

திமுகவினர் மீதான வழக்கில் இன்று சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஐரானார் விளையாட்டுத்துறைஅமைச்சர் இன்பத்தமிழன்.

2 ஆண்டுகளுக்கு முன்பு சைதாப்பேட்டை சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடந்தது. அப்போது திமுகவினர்வன்றையில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அமைச்சர் இன்பத்தமிழன் புகார் கொடுத்தார். இந்த புகாரின்அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதுதொடர்பான வழக்கு சைதாப்பேட்டை 11வது குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கின் முக்கியசாட்சியும், புகார் கொடுத்தவருான இன்பத் தமிழனை விசாரணைக்கு ஆஜராகுமாறு நீதிமன்றம் பல முறைஉத்தரவிட்டும் அவர் வரவில்லை.

இதையடுத்து அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இன்பத்தமிழனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுநீதிபதி உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து இன்று அவராகவே நீதிமன்றத்தில் ஆஜரானார். இதையடுத்து அவருக்கு எதிரான பிடிவாரண்ட்ரத்து செய்யப்பட்டது. பின்னர் இன்பத் தமிழனிடம் திமுக வக்கீல்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி ஆறுமுகம் வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X