திமுக கூட்டணிக்கு த.மு.மு.க. ஆதரவு
சேலம்:
திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் ஆதரவுதெரிவித்துள்ளது.
த.மு.மு.கவின் மாநில மாநாடும், பேரணியும் தஞ்சாவூரில் நடந்தது. லட்சக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். மாநாட்டுக்கு முன்பு பிரமாண்டமான பேரணியும் நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும்சேர்ந்த ஆண்கள், பெண்கள் இதில் பங்கேற்றனர்.
பேரணியின் முடிவில் திலகர் திடலில் மாநாடு நடந்தது. மாநாட்டின்போது பல்வேறு தீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. இது குறித்து கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறுகையில், திமுக,மதிமுக, பா.ம.க., கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்துள்ள ஜனநாயகமுற்போக்குக் கூட்டணிக்கு எங்களது ஆதரவைத் தெரிவித்துள்ளோம்.இந்தக் கூட்டணி நாடாளுமன்றத் தேர்தலில்வெற்றி பெற வேண்டும் என்று விரும்புகிறோம் என்றார்.
மாநாட்டையொட்டி தஞ்சையில் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும்,போலீஸாரின் தலைகளை விட த.மு.மு.க தொண்டர் படையின் தலைகளே அதிகம் இருந்தது. அவர்களே மிகவும்அருமையாக தொண்டர்களை ஒழுங்கும் படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.












Click it and Unblock the Notifications