பாஜகவினரை நெளிய வைத்த அதிமுக எம்எல்ஏ- குறட்டை விட்ட எம்பி

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் நடந்த அதிமுக, பா.ஜ.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் பிரதமர் வாஜ்பாய் குறித்து அதிமுக எம்.எல்.ஏ.பெருமாள் விமர்சித்ததால், மேடையில் இருந்த பா.ஜ.க. தலைவர்கள் தர்மசங்கடத்தில் நெளிந்தனர். ஆனால்,கூட்டணி தர்மத்துக்காக அதைப் பொறுத்துக் கொண்டு அமைதி காத்தனர்.

தூத்துக்குடியில் அதிமுக, பா.ஜ.க. கூட்டு செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் தூத்துக்குடி எம்.பி.அமிர்தகணேசன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பெருமாள் உள்ளிட்ட அதிமுகவினரும், பா.ஜ.க. தலைவர்களும்கலந்துகொண்டனர்.

பெருமாள் பேசுகையில், கடந்த சட்டசபைத் தேர்தலின்போது நமது அம்மாவை தேர்தலில் போட்டியிட முடியாமல்வாஜ்பாய் அரசுதான் தடுத்தது. தேர்தல் ஆணையத்தின் மூலம் அம்மாவின் வேட்பு மனுக்களை தள்ளுபடிசெய்தனர். இப்போது அம்மாவுடன் கூட்டணி வைத்துள்ளனர். இதுதான் அம்மாவின் மகிமை என்ற ரீதியில் பேசிக்கொண்டே போக,மேடையில் இருந்த பா.ஜ.கவினர் நெளிய ஆரம்பித்தனர்.

பெருமாள் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்கையில், முன் வரிசையில் அமர்ந்திருந்த எம்.பி. அமிர்தகணேசன்குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார்.

இதைப் பார்த்த அதிமுகவினர் அதிர்ந்தனர். அவரை எழுப்புவதற்காக பின்னர் பேசிய பேச்சாளர்கள்வேண்டுமென்றே ஹை-டெசிபலில் மைக்கில் கத்த, அப்படியும் எழவில்லை எம்.பி. இதையடுத்துசும்மாகாச்சுக்கும் எல்லோருமாக சேர்ந்து கைகளைத் தட்டி சத்தம் எழுப்பிய பின்னர் தான் விழித்தார்அமிர்தகணேசன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+