வேட்டி அவுந்துருச்சுப்பா...
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடந்த காங்கிரஸ் இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் வீராவேசமாகப் பேசிக்கொண்டிருந்தார் அந்த மாவட்டச் செயலாளர் பாலு.
இந்திரா காந்தி, ராஜிவ் காந்தியின் தியாகங்களை மறந்துவிட முடியுமா?. சோனியாவை வெளிநாட்டவர் என்றுகூறும் ஜெயலலிதா எந்த ஊர்க்காரர்.. என்றரீதியில் மைக்கை கடித்து கொண்டிருந்தார்.
மேடையே அதிரும் வண்ணம் குதித்து, ஆவேசமாக அவர் பேசிக் கொண்டிருந்தபோதே, அவர் கட்டியிருந்தவேட்டி அவிழ்ந்தது. உள்ளே போட்டிருந்த பட்டா, பட்டி அண்ட்ராயருடன் நின்றார் பாலு.
வேட்டி நழுவியது கூட தெரியாமல் அவர் தன் பேச்சில் ஆர்வமாய் இருக்க, மேடையில் அமர்ந்திருந்த நிர்வாகிகள்ஓடி வந்து வேட்டியை எடுத்து அவருக்கு கட்டிவிட்டனர். அப்போது தான் வேட்டி தன்னைவிட்டுச் சென்றதையேஅவர் உணர்ந்தார்.
வேட்டியை இறுக்கிக் கட்டிக் கொண்டு ஆவேச உரையை தொடர்ந்தார் பாலு.












Click it and Unblock the Notifications