இந்திரகுமாரி மீதான வழக்கில் ஏப். 7ல் தீர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் மீதான இலவச செருப்பு ஊழல் வழக்கில் அடுத்தமாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று முதலாவது தனி நீதிமன்ற நீதிபதி மதிவாணன் அறிவித்துள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 1.20 கோடி அளவுக்கு இலவச செருப்புகளை வழங்கியதில் ஊழல்நடந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர்கள் இந்திரகுமாரி, ஈஸ்வரமூர்த்தி உள்ளிட்ட 21 பேர் மீது கடந்த திமுகஆட்சிக் காலத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
முதலாவது தனி நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு குற்றப்பத்திரிக்கைதாக்கல் செய்யப்பட்டது. இன்றுடன் சாட்சிகள் விசாரணை முடிவடைந்தது. இதையடுத்து இந்த வழக்கில் அடுத்தமாதம் 7ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி மதிவாணன் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications