சரவண பவன் ராஜகோபாலுக்கு ஆதரவாக தடயவியல் நிபுணர் சாட்சியம்!
சென்னை:
சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் அவருக்குச் சாதகமாக பிரபல தடவியல்நிபுணர் டாக்டர் சந்திரசேகர் சாட்சியம் அளித்துள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு, ஆட்டோ சங்கர் வழக்கு ஆகியவற்றின் மூலம் பிரபலமானவர் தடயவியல் நிபுணர்டாக்டர் சந்திரசேகர். சென்னை மருத்துவக் கல்லூரியின் தடயவியல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர்தற்போது ஜோத்பூரில் உள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார்.
ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் இவர் தற்போது சாட்சியம் அளித்துள்ளார். அவரது சாட்சியம்ராஜகோபாலுக்கு சாதகமாக இருக்கிறது என்பதால் கொலை வழக்கில் முக்கியத் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
டாக்டர் சந்திரசேகரின் சாட்சியம்: சாந்தகுமார் கொலை வழக்கில், கொடைக்கானலில் கண்டெடுக்கப்பட்ட மண்டைஓட்டை ஆய்வு செய்து அறிக்கை கொடுத்த தடயவியல் நிபுணர் டாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையைமுழுவதுமாக படித்துப் பார்த்தேன்.
சம்பந்தப்பட்ட மண்டை ஓடு சாந்தகுமாருடையதுதான் என்பதற்கு ஆதாரமாக 6 அம்சங்களை டாக்டர்ஜெயப்பிரகாஷ் கொடுத்துள்ளார். ஆனால் இந்த 6 அம்சங்களும் அறிவியல் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவை அல்ல. இது பல்வேறு வழக்குகளில் நீதிமன்றங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இறந்த நபருடைய புகைப்படத்தின் தலைப் பகுதியை அப்படியே எடுத்துக் கொண்டு அதை மண்டை ஒட்டுடன்ஒப்பிட்டுப் பார்க்க முடியாது. வெறும் மண்டை ஓட்டை மட்டும் வைத்துக் கொண்டு அதை இறந்தவருடையபுகைப்படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் முழுமையான அளவுக்கு அது அவர்தான் என்பதை உறுதி செய்யமுடியாது.
புகைப்படத்தில் உள்ள நபருடைய மண்டை ஓடுதான் இது என்றும் உறுதியிட்டுக் கூற முடியாது. டாக்டர்ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் உள்ளவை அவருடைய கருத்தாக மட்டுமே ஏற்க முடியும். அதை சட்டப்பூர்வமாகஏற்க முடியாது.
டாக்டர் ஜெயப்பிரகாஷின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள 6 காரணங்களையும் எந்த தடயவியல் நிபுணரும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இது ஆராய்ச்சி நிலையிலேயே உள்ள காரணங்களாகும் என்று கூறியுள்ளார் டாக்டர்சந்திரசேகர்.
டாக்டர் சந்திரசேகரிடம் அரசுத் தரப்பு வழக்கறிர் குறுக்கு விசாரணை செய்யவுள்ளார். இந் நிலையில் கொலைவழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அப்போது ஜீவஜோதி ஆஜராகவுள்ளார்.