ஓட்டு கேட்க வந்த அதிமுக எம்.எல்.ஏவை விரட்டியடித்த கிராமம்
மதுரை:
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பகுதியில் வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக எம்.எல்.ஏ. ராஜாங்கத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டு ஊருக்குள் வராமல் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெயராமன், எம்.எல்.ஏ. ராஜாங்கம் ஆகியோர் அடங்கிய அதிமுகவினர் ஏராளமான கார்களில் அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஓட்டு கேட்க சென்றனர்.
எம்.மேட்டுப்பட்டி பகுதியில் அவர்கள் ஓட்டு கேட்க சென்றபோது திடீரென்று ஊர் மக்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஓட்டு கேட்க ஊருக்குள் வர வேண்டாம் என்று அவர்கள் கூறியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கிராம மக்களை சமாதானப்படுத்தி கலைந்து போகச் செய்தனர். இதனைத் தொடர்ந்து அதிமுகவினர் ஊருக்குள் செல்லாமல் திரும்பிச் சென்றனர்.












Click it and Unblock the Notifications