ரஜினியின் ஆதரவை கோருகிறார் சு.சுவாமி
மதுரை:
யாருமே தனக்கு ஆதரவாக இல்லை என்பதால், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஆதரவைப் பெறப் போவதாகமதுரையில் தன்னந்தனியாகப் போட்டியிடும் ஜனதாக் கட்சி தலைவர் சுப்புரமணியம் சுவாமி கூறியுள்ளார்.
மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் ஜனதாக் கட்சி சார்பில் சுயேச்சையாகப் போட்டியிடும் சுப்புரமணிய சுவாமி,ஜெயலலிதாவின் ஆதரவைக் கோரி வந்தார். ஆனால் அம்மா அவரைக் கண்டு கொள்ளவில்லை. மாறாக, தனதுகட்சி சார்பில் ஏ.கே.போஸ் என்பவரை வேட்பாளராக களம் இறக்கி விட்டார்.
இதனால் சற்றும் மனம் தளராத சுவாமி, தொடர்ந்து ஜெயலலிதாவின் புகழ் பாடி வருகிறார். ஆனால் அம்மாவின்கடைக்கண் பார்வை அவருக்குக் கிடைக்காமலேயே உள்ளது.
இப்படியேப் போனால் என்ன செய்வீர்கள் என்று கேட்டால், ரஜினியின் ஆதரவைக் கேட்பேன் என்று கூலாக பதில்சொல்கிறார் சுவாமி.
இந்தத் தேர்தலில் யாரைக் கேட்டாலும் ரஜினி எங்களுக்குத்தான் வாய்ஸ் தருகிறார் என்று கூறுகிறார்கள். அந்தவகையில் சுவாமியும் ரஜினியின் வாய்ஸை கோருவதில் தவறில்லையே!












Click it and Unblock the Notifications