தமிழை அழிக்கும் முயற்சியில் ஜெ, பா.ஜ.க.: ராமதாஸ் குற்றச்சாட்டு
சேலம்:
தமிழையும், தமிழ் இனத்தையும் அழிக்கும் முயற்சியில் ஜெயலலிதாவும், பா.ஜ.கவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகபா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
சேலம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் அருளுக்காக சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் பிரச்சாரம் நடந்தது. இதில்ராமதாஸ், திமுக மாவட்டச் செயலாளர் வீரபாண்டி ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தாரமங்கலத்தில் நடந்த தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், தமிழையும், தமிழ்இனத்தையும் அழிக்கும் முயற்சியில் அதிமுகவும், பா.ஜ.கவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. தமிழுக்காக குரல்கொடுத்தவர்களை சிறையில் அடைத்து அழகு பார்க்கிறது அதிமுக, இதற்கு ஆதரவாக குரல் கொடுக்கிறது பா.ஜ.க.
ஜெயலலிதா பதவியில் இருக்கும் வரை தமிழுக்கும், தமிழர்களுக்கும் விடிவு காலம் கிடையாது. தமிழர்களைஅழிக்காமல் விட மாட்டேன் என்று கங்கனம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள் ஜெயலலிதாவும், பா.ஜ.கவினரும்.
அண்ணாவின் கொள்கைகளுக்கும், அதிமுகவுக்கும் சற்றும் சம்பந்தம் இல்லை. எனவே நாடாளுமன்றத் தேர்தலில்மக்கள் அதிமுக, பா.ஜ.கவை நிராகரிக்க வேண்டும் என்று பேசினார்.












Click it and Unblock the Notifications