For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பேராசிரியர் அடித்தார்: குமரியில் மாணவர்கள் திடீர் போராட்டம்

By Staff
Google Oneindia Tamil News

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள தனியார் கல்லூரி மாணவரை பேராசிரியர் தாக்கியதுமற்றும் கல்லூரிக்குள் அத்துமீறி வந்து போலீஸார் விசாரணை நடத்தியது ஆகியவற்றைக் கண்டித்து மாவட்டம்முழுவதிலும் உள்ள கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டம் நடத்தினர்.

திருவட்டார் அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்த இம்மானுவேல் என்ற மாணவரை கல்லூரிபேராசியர் ஒருவர் அடித்து விட்டதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்புப்புறக்கணிப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த சமயம், கல்லூரி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், போலீஸார் கல்லூரிக்கு வந்து மாணவர்களிடம்விசாரணை நடத்தினர். இதை மாணவர்கள் கண்டித்தனர்.

மாணவரைத் தாக்கிய பேராசிரியர், கல்லூரிக்குள் அத்துமீறி வந்த போலீஸார் ஆகியோர் மீது நடவடிக்கைஎடுக்கக் கோரி மாணவர்கள் இன்றும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குஆதரவாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளின் மாணவர்களும் வகுப்புப் புறக்கணிப்புப் போராட்டத்தில்குதித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X