கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
சென்னை:
தமிழக அரசு அலுவலகங்களில் மக்கள் வரிப்பணத்தில் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ள சாதனை விளம்பரப்பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கிஉத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நகராட்சி, மாநகராட்சி ஆணையர்கள் உள்ளிட்டோருக்கு அவர்அனுப்பியுள்ள உத்தரவில், அரசுப் பணத்தில் வைக்கப்பட்டுள்ள அரசின் சாதனைகள் அடங்கிய விளம்பரப்பலகைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், தனியார் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள், வரையப்பட்டுள்ள விளம்பரங்கள் ஆகியவற்றைஅழிக்கவும் சாரங்கி உத்தரவிட்டுள்ளார். கட்டட உமையாளர்களிடம் அனுமதி பெற்றிருந்தாலும் கூட அந்தவிளம்பரங்களையும் அழிக்க வேண்டும் என்று சாரங்கி உத்தரவிட்டுள்ளார்.
மொத்தத்தில், சுவர் விளம்பரம், தட்டி, போஸ்டர்கள் இல்லாத தேர்தலாக இது இருக்கப் போகிறது என்பது மட்டும்தெகிறது.












Click it and Unblock the Notifications