"இவர்களுக்கும்" வாக்குரிமை!
சென்னை:
அரவாணிகளுக்கும் வாக்களிக்கும் உரிமை உண்டு. அவர்கள் ஆணா, பெண்ணா என்பதை அவர்கள்தான்தீர்மானிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அரவாணிகளுக்கு வாக்குரிமை உள்பட அடிப்படை உரிமைகளை வழங்கக் கோரி தமிழக பெண்கள்கூட்டமைப்பின் மதுரை வழக்கறிஞர் ரஜினி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல்செய்தார்.
அந்த மனுவில் தமிழகத்தில் 1.5 லட்சம் அரவாணிகள் உள்ளனர். இவர்களுக்கு வாக்குரிமை இல்லை. ரேஷன்கார்டு போன்ற அடிப்படை உரிமை கூட மறுக்கப்படுகிறது. இவர்களுக்கு இந்த சமூக அடிப்படை வசதிகளைவழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி தணிகாச்சலம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச்,அரவாணிகளுக்கும் வாக்குரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது. அவர்களின் வாக்குரிமை குறித்துதொலைக்காட்சிகள், செய்தித் தாள்களில் அரசு முறையாக விளம்பரங்கள் செய்ய வேண்டும்.
தாங்கள் ஆணா, பெண்ணா என்பதை அரவாணிகள்தான் முடிவு செய்ய வேண்டும். அதன்படி தங்களதுபெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதையும் அவர்களுக்கு டிவி மற்றும் செய்தித்தாள்களில்அரசு விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications