அடுத்த சில நாட்களில் தமிழகத்தில் வெயில் மேலும் அதிகரிக்கும்
சென்னை:
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் வெயிலின் அளவு மேலும் அதிகரிக்கும் என நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை காலம் முழுமையாக தொடங்கும் முன்பே அனல் வீசுகிறது. குறிப்பாக வேலூர், அரக்கோணம்,சேலம், மதுரை ஆகிய பகுதிகளில் வழக்கத்தை விட அதிகமான வெயில் அடிக்கிறது.
மேற்கண்ட பகுதிகளில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் உள்ளது.இதனால் மக்கள் கடும்அவதிக்குள்ளாகியுள்ளனர். இந் நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய நுங்கம்பாக்கம் வானிலைஆராய்ச்சிநிலைய இயக்குனர் ரமணன்,
சூரியன் மகர ரேகையில் இருந்து கடக ரேகைக்கு இடம் மாறியுள்ளதால், தற்போது பூமியின் வட பாகத்தில் உள்ளதமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் சூரிய ஒளிக் கதிர்கள் சாய்வாக இல்லாமல் நேராக பூமி மீது விழுகின்றன. இதன்காரணமாகவே வெயிலின் உக்கிரம் அதிகமாக உள்ளது.
இன்னும் சில நாட்களில் காற்றின் திசை மாற்றமும் பாதமாக இருக்கும் என்பதால் வெயில் மேலும் அதிகமாகவேஇருக்கும்.
எப்போதும் குளுமையா காணப்படும் கோவை, பொள்ளாச்சி போன்ற ஊர்களில் கூட தற்போது 100 டிகிரிக்குமேல் வெயில் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது. தலைநகர் சென்னை பற்றிக் கூறவே வேண்டாம். கடும்வெயிலுடன், கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறையும் சேர்ந்து மாநகர மக்களை வதைத்து வருகின்றன












Click it and Unblock the Notifications