முதல் கட்டத் தேர்தல்: வேட்பு மனு தாக்கல் தொடங்கியது
டெல்லி:
மக்களவைக்கு முதல் கட்டத் தேர்தல் நடக்கவுள்ள 141 தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது.
5 கட்டமாக இந்தத் தேர்தல் நடக்கவுள்ளது. முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 20ம் தேதி ஆந்திரம், கர்நாடகம்(மக்களவையுடன் சட்டமன்றத் தேர்தலும்), குஜராத், காஷ்மீர், மிசோரம், டையு-தாமன், சத்தீஸ்கர், பிகாரின் ஒருபகுதி, மகாராஷ்டிரம், அஸ்ஸாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் 141 தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. மார்ச் 31ம் தேதி வரை வேட்பு மனுக்கள் தாக்கல் நடக்கும்.இந்த முதல் கட்டத் தேர்தலில் மட்டும் 6.75 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.
அடுத்த 5 கட்டத் தேர்தல்கள் ஏப்ரல் 22, 26, மே 5,10ம் தேதிகளில் நடக்கவுள்ளது. மே 10ல் நடக்கும் கடைசிகட்டத் தேர்தலில் தான் தமிழகத்தில் வாக்குப் பதிவு நடக்கிறது.
அனைத்து கட்டத் தேர்தல்களும் முடிந்து மே 13ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். அன்று பிற்பகலிலேயேமுடிவுகள் தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications