For Daily Alerts
Just In
காங். ஆட்சி வந்தால்தான் இந்தியா ஒளிரும்: ராமதாஸ்
சென்னை:
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால்தான் இந்தியா ஒளிரும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பாமகவின் எண்ணங்களையேபிரதிபலித்துள்ளது. இந்தத் தேர்தல் அறிக்கையை பாமக வரவேற்கிறது.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை நிறைவேற்றப்பட்டால் உண்மையிலேயே இந்தியாஒளிரும். இப்போது உள்ளது இல்லாமல், மிகவும் பிரகாசமாக ஒளிரும்.
பெண்கள், தலித்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் ஆகியோரது நலனில் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளஅக்கறையும், அவர்களை முன்னேற்ற உண்மையிலேயே எடுக்கவுள்ள நடவடிக்கைகளையும் வெளிப்படுத்துகிறதுதேர்தல் அறிக்கை.
தொலைநோக்குடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சிநிச்சயம் நிறைவேற்றும் என்று கூறியுள்ளார் அவர்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Wednesday, March 24, 2004, 5:30 [IST]