தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய விவகாரம்: அரசு உத்தரவுக்குத் தடை
சென்னை:
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுபிறப்பித்த உத்தரவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயித்து வழங்க வேண்டும் என்று பள்ளிஉரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த மனுவில், அரசுப் பள்ளிகளிலேயே குறைந்தபட்ச ஊதியத்தை அரசினால் வழங்க முடியாத நிலை உள்ளது.அப்படி இருக்கையில் தனியார் பள்ளிகளால் இந்த உத்தரவை அமல்படுத்துவது கடினம் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுஉத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யுமாறும் அரசுக்கு நோட்டீசும் அனுப்பினார்.