தேர்தல்: விமானங்களில் பறக்கும் கோடிகள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

விமானப் பயணிகள் அதிகளவு பணத்தைக் கொண்டு செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும்படி விமானபோக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

வேட்பாளர்களுக்குக் கொடுக்கவும், தேர்தல் செலவுகளுக்காகவும் கட்சித் தலைமைகள் இடமிருந்தும்,தொழிலதிபர்களிடம் இருந்தும் கலெக்ட் செய்யப்படும் கோடிக்கணக்கான பணம் விமானங்கள் மூலமாக நாடுமுழுவதும் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக டெல்லி, மும்பையில் இருந்து ஏராளமான பணம் அனுப்பப்பட்டு வருகிறது. அதே போல சென்னை,பெங்களூர், ஹைதராபாத் போன்ற இடங்களில் இருந்தும் பல்வேறு கட்சித் தலைமைகளுக்கு தொழிலதிபர்கள்அனுப்பும் பணம் போய்க் கொண்டிருக்கிறது.

இப்போது இதைக் கட்டுப்படுத்தும் வேலைகளில் தேர்தல் கமிஷன் இறங்கியுள்ளது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையம் விமான போக்குவரத்துத் துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளகடிதத்தில், பயணிகள் கொண்டு வரும் பைகளில் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் உள்ளதா என்றுபரிசோதிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

தலைமைத் தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவை அமல்படுத்தும் அதிகாரம், அனைத்து விமானநிலையங்களிலும் பாதுகாப்பு பணியை மேற்கொண்டுள்ள மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வசம்வழங்கப்பட்டுள்ளது.

ரூ.10 லட்சத்துக்கும் அதிகமாக பணம் கொண்டு செல்லும் பயணிகள் குறித்த தகவல்கள் உடனடியாக பதிவுசெய்யப்படும். அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும். விளக்கம் போதுமானதாக இல்லாவிட்டலோ, அதுதேர்தலுக்காக கொண்டு செல்லப்படும பணமாக இருந்தாலே அந்த விஷயத்தில் தேர்தல் கமிஷன் தலையிடும்.

அதே போல ஆளும் பா.ஜ.கவைச் சேர்ந்த பலருக்கும் ஏர் இந்தியா நிறுவனம் லண்டன் சென்று வர இலவசபாஸ்களை வழங்கியுள்ளது குறித்தும் தேர்தல் கமிஷன் கடுப்படைந்துள்ளது. நாளை மாலை 5 மணிக்குள் யார்,யாருக்கு இலவச பாஸ் தரப்பட்டது என்ற விவரத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என ஏர் இந்தியாவுக்குதேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+