திமுக பிரமுகர் கொலைக்கு நில தகராறு காரணம்?
சென்னை:
திருவேற்காடு நகர திமுக செயலாளர் கஜேந்திரன் கொலைக்கு நில தகராறு காரணமாக இருக்கலாம் என்றுபோலீஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் கஜேந்திரனும், அவரது வீட்டுக் காவலாளியும் மர்ம நபர்கள் சிலரால் படுகொலைசெய்யப்பட்டனர். இதைத் தடுக்க முயன்ற கஜேந்திரனின் மனைவி பொம்மி, மகள் கவிதா ஆகியோரும்தாக்கப்பட்டனர்.
கஜேந்திரன் உடல் இன்று காலை 9.30 மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது. இந் நிலையில் நில விவகாரம்தொடர்பாகவே கஜேந்திரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் கருதுகின்றனர். கஜேந்திரனுக்குநெருக்கமான ஒரு தொழிலதிபர் இதைச் செய்திருக்கிலாம் என்று போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
கஜேந்திரனுக்கு ஏராளமான நிலங்கள் உள்ளன. அதில் சுமார் 3,000 விவசாயிகள் வரை வேலைபார்த்துவருகின்றனர்.
நில விவகாரம் சம்பந்தமான பிரச்சனையில் அவருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் கஜேந்திரன் மீதுவெறுப்பாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றுசந்தேகிக்கப்படுகிறது.
வீட்டினுள் கொள்ளையடிக்கப்பட்ட நகை, பணம் போன்றவை போலீசாரின் கவனத்தை திசை திருப்புவதற்காகசெய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.
குற்றவாளிகளை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பிடித்துவிடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications