மீண்டும் காங்கிரஸ் உடையாது: இளங்கோவன்
சென்னை:
மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் நிலவி வரும் சிக்கலால் தமிழக காங்கிரஸ்உடையாது என்று முன்னாள் காங்கிரஸ் செயல் தலைவர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தமிழக காங்கிரஸ் வேட்பாளர்கள் குறித்து ஒரு யூகமான பட்டியல் வெளிவந் துள்ளது. இதை வைத்து முதல்வர்ஜெயலலிதாவின் கூலிப்படையினர் சிலர் காங்கிரசார் பெயரில் போராட்டம் செய்து வருகிறார்கள்.
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி விரைவில் வெளியிடுவார். அவர்வெளியிடக்ககூடிய பட்டியலை உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்றுக் கொண்டு கூட்டணி வெற்றிக்காககடுமையாக பாடுபடுவார்கள்.
வேட்பாளர் பட்டியலில் பெயர் இடம் பெற பணம் கைமாறியதாக கூறப்படுவது,- காங்கிரஸ் கட்சியைகொச்சைப்படுத்துவதற்காக செய்யப்பட்ட விளம்பரமாகும்.
எந்த தொகுதியில் என்னை கட்சி மேலிடம் நிறுத்தினாலும் போட்டியிட தயார். ஆனால் கோபிச்செட்டிபாளையம்தொகுதியில் போட்டியிட விரும்புவதாக சோனியா காந்தியிடம் தெரிவித்துள்ளேன்.
வேட்பாளர் பட்டியல் பிரச்சினையில் தமிழகத்தில் காங்கிரஸ் உடைந்து மீண்டும் தமாகாவை உருவாக்கும் முடிவைஅவர்கள் (வாசன் தரப்பு) எடுக்க மாட்டார்கள் என்று கூறினார்












Click it and Unblock the Notifications