பாமகவை தோற்கடிக்க அம்பேத்கர் மக்கள் இயக்கம் சபதம்
காஞ்சிபுரம்:
பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அக்கட்சி வேட்பாளர்களை மண்ணைக் கவ்வ வைப்பதேஎங்களது இயக்கத்தின் லட்சியம் ஆகும் என்று அம்பேத்கர் மக்கள் இயக்கத் தலைவர் வை.பாலசுந்தரம்கூறியுள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தலித் மக்களின் சீரழிவுக்கு பாமகவும் ஒரு காரணம்.எனவே பாமக வேட்பாளர்களைத் தோற்கடிப்பது எங்களது தலையாய கடமையாகும். தேவைப்பட்டால், பாமகபோட்டியிடும் 6 தொகுதிகளிலும் எங்களது வேட்பாளர்களை நிறுத்தத் தயங்க மாட்டோம்.
வன்னியர்கள் எங்களது எதிரிகள் என்றாலும் கூட பாமகவுக்கு எதிரான போக்கு கொண்ட வன்னியரானஜெகத்ரட்சகனுக்கு ஆதரவு தர நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் வீர வன்னியர் பேரவை என்ற பெயரிலேயேஅவர் தேர்தலில் போட்டியிட வேண்டும்.
செங்கல்பட்டு, தர்மபுரி உள்ளிட்ட சில பகுதிகளில் எங்களது இயக்கத்திற்கு நல்ல தொண்டர் பலம் உள்ளது.அங்கெல்லாம் பாமகவுக்கு படுதோல்வி கிடைக்கும் என்றார் வை.பாலசுந்தரம்.












Click it and Unblock the Notifications