6 லாரிகளுடன் 102 டன் ரேஷன் அரிசி கடத்தல்
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரிலிருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்ட 102 டன் அரிசியை லாரிகளுடன் சிலர்கடத்தியுள்ளனர். இது தொடர்பாக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.
சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் இருந்து கடந்த 17ம் தேதி102 டன் ரேஷன் அரிசி 6 லாரிகளில் பல்வேறு கடைகளுக்காக அனுப்பப்பட்டது. இந்த அரிசி மூடைகள் 20ம்தேதிக்குள் கடைகளுக்குப் போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.
ஆனால் 22ம் தேதி வரை அரிசி மூடைகள் வராததால், மாவட்ட ஆட்சித் தலைவர் ராமச்சந்திரனுக்குத் தகவல்அனுப்பப்பட்டது. இதையடுத்து போலீஸில் புகார் செய்ய ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார்.
புகாரைப் பதிவு செய்த போலீஸார், தீவிர விசாரணை நடத்தி லாரிகளுடன் அரிசியைக் கடத்தியவர்கள் குறித்துதேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே நுகர்பொருள் வாணிபக் கழகத்தைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications