தாகூரின் நோபல் பரிசு திருட்டு
கொல்கத்தா:
புகழ் பெற்ற வங்காளக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் நோபல் பரிசு திருடு போயுள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசு தாகூருக்கு 1931ம் ஆண்டு வழங்கப்பட்டது. நோபல் பரிசு பணத்துடன்வழங்கப்பட்ட பதக்கம், தாகூர் பயன்படுத்திய கடிகாரம், பிரேஸ்லெட் ஆகியவை அவரது நினைவாக கொல்கத்தாவிஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தில் உள்ள சாந்திநிகேதன் மியூசியத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை மியூசித்தைத் திறந்து பார்த்த ஊழியர்கள் நோபல் பதக்கம் உள்ளிட்ட தாகூரின் பொருட்கள் திருடுபோயிருப்பதைக் கண்டனர். மியூசியத்தின் ஜன்னலை உடைத்து திருடர்கள் உள்ளே புகுந்ததாக காவல் துறைஉயரதிகாரி சாயன் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
மியூசியத்தின் காவலாளிகள் உள்ளிட்ட சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரை யாரும்கைது செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
இது குறித்து மேற்கு வங்காள முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கூறுகையில், இது மிக மோசமான சம்பவம்என்றார்.
இச் சம்பவத்தையடுத்து சாந்திநிகேதன் மியூசியம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications