பொடா வழக்கு: குரல் சோதனைக்கு ஒத்துழைக்க மறுத்தார் வைகோ: அரசுத் தரப்பு சாட்சியம்
சென்னை:
குரல் பரிசோதனைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஒத்துழைக்க மறுத்ததாக பொடா வழக்கில் அரசுத்தரப்பில் ஒருவர் சாட்சியம் தெரிவித்தார்.
மதுரை திருமங்கலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதாக வைகோஉள்ளிட்டவர்கள் மீது பொடா சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. பூந்தமல்லியில் உள்ள பொடாநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது.
சாட்சிகளின் குறுக்கு விசாரணை நடந்தபோது அரசுத் தரப்பில் ஆஜரான வேலூர் தாசில்தார் மோகன்ராஜ்கூறுகையில், வைகோவிடம் குரல் பரிசோதனை நடத்துவதற்காக நானும் விசாரணை அதிகாரி லியோ என்பவரும்வேலூர் சிறைக்குச் சென்றோம்.
அங்கு வைகோவிடம் குரல் பரிசோதனை நடத்த வேண்டும் என்று கூறினோம். இது தொடர்பான அறிக்கைஒன்றையும் தயார் செய்து வைகோவிடம் கொடுத்தோம். அதைப் படித்துப் பார்த்து விட்டு அவர் கையெழுத்துப்போட்டார்.
இருப்பினும், குரல் பரிசோதனைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. இப்படிச் செய்தால் ஏற்படும் விளைவுகள்குறித்துத் தெரியுமா என்று வைகோவிடம் அதிகாரி லியோ கேட்டபோது, எனக்குத் தெரியும் என்று வைகோபதிலளித்தார். பின்னர் குரல் பரிசோதனையைக் கைவிட்டு விட்டு வந்துவிட்டோம் என்றார் தாசில்தார்மோகன்ராஜ்.
பின்னர் வைகோ தரப்பு வழக்கறிஞர் தேவதாஸ், மோகன்ராஜிடம் குறுக்கு விசாரணை செய்தார்.












Click it and Unblock the Notifications