கமல்நாத் கொடும்பாவி எரிப்பு தொடர்கிறது: வேண்டாமே என்கிறார் வாசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அகில இந்திய காங்கிஸ் பொதுச் செயலாளர் கமல்நாத்தின் கொடும்பாவியைஜி.கே.வாசன் ஆதரவு காங்கிரஸார் கொளுத்தி வருகின்றனர். இதை வாசன் கண்டித்துள்ளார், அமைதியாகஇருக்குமாறு தொண்டர்களுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக நாடாளுமன்றத் தேர்தலில் வாசன் ஆதரவாளர்களை சுத்தமாக புறக்கணித்து விட்டு எதிர் முகாம்களைச்சேர்ந்தவர்களுக்கு கமல்நாத் பரிந்துரையின் பேரில் கட்சி மேலிடம் சீட் கொடுத்தது. இதையடுத்துஅதிருப்தியடைந்த வாசன், கட்சி மேலிடத்துடன் நடந்த பேச்சுவார்த்தையிலிருந்து வெளிநடப்புச் செய்தார்.

இதையடுத்து தமிழகத்தில் உள்ள வாசன் ஆதரவு காங்கிரஸார் போராட்டத்தில் குதித்துள்ளனர். சென்னையில்உள்ள சத்யமூர்த்தி பவனில் அவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சென்னை, மதுரை, திருச்சி,விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் கமல்நாத்தின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. இது தொடர்பாகபலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் வாசன் டெல்லியிலிருந்து வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், கட்சித் தொண்டர்கள் யாரும்போராட்டம் நடத்தக் கூடாது, உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு ஆகியவற்றை உடனடியாக நிறுத்தவேண்டும். அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+