வெறும் 20 மார்க்: மக்களிடம் பெயில் ஆன ஜெ

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தேசிய அளவில் கருத்துக் கணிப்பில், நாட்டிலேயே மிக மோசமான முதல்வர் என்ற பெருமையை ஜெயலலிதா பெற்றுள்ளார்.

தேர்தல் கருத்துக் கணிப்பியல் நிபுணர் பிரணாய் ராய், மும்பை இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம், முன்னணி கருத்துக் கணிப்புநிறுவனமான ஏசி.நீல்சன் ஆகியவை நடத்திய கருத்துக் கணிப்பில் இந்த விவரம் தெரியவந்துள்ளது.

அந்தந்த மாநிலங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் சராசரியாக நூற்றுக்கு 47 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் பிற மாநிலமுதல்வர்கள். ஆனால், ஜெயலலிதாவுக்கு தமிழக மக்கள் வெறும் 20 மதிப்பெண்கள் தான் வழங்கியுள்ளனர்.

நாட்டிலேயே மிக மோசமான ஆட்சி நடப்பதாகக் கூறப்படும் பிகாரில் கூட அம் மாநில முதல்வர் ராப்ரி தேவிக்கு 45க்கும் மேலாகமதிப்பெண் வழங்கியுள்ளனர் பிகார் மக்கள்.

மக்களிடம் வெறும் 20 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஜெயலலிதா தான் இந்தியாவிலேயே மகா மட்டமான முதல்வர் என்று கருத்துக்கணிப்புகளில் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதா காவிரிப் பிரச்சனையை கையாண்ட விதம், பொடா மற்றும் வைகோவை சிறையில் அடைத்த விவகாரம், ஆடு,கோழி பலியிடத் தடை விதித்தது, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தது என எதையும் மக்கள் ஏற்கவில்லைஎன்பதும் கருத்துக் கணிப்புகளில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்குமே மக்கள் ஜெயலலிதாவுக்கு எதிராகவே கருத்து கூறியுள்ளனர்.

குறிப்பாக கோவில்களில் பலியிடத் தடை விதித்தது, திராவிட பாரம்பரியத்துக்கு எதிராக மத விஷயத்தில் ஜெயலலிதா காட்டும்தீவிரம் ஆகியவை அவருக்கு எதிராக பூமராங் ஆகியுள்ளன.

அதே போல காவிரியும், வைகோவும்தான் ஜெயலலிதாவை கவிழ்த்து விட்டன.

ஜெயலலிதாவின் அதிமுக-பா.ஜ.க. கூட்டணிக்கு தமிழகத்தில் மொத்தமே 5 நாடாளுமன்றத் தொகுதிகளில் தான் வெற்றிகிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+