For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தயாநிதிக்கு அமைச்சர் பதவி கேட்டேனா?: ஜெவுக்கு கருணாநிதி கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

முரசொலி மாறனின் மகன் தயாநிதி மாறனுக்கு நான் மத்திய அமைச்சர் பதவி கேட்டதாகவும் அதைத் தராததால் தான்கூட்டணியில் இருந்து வெளியேறியதாகவும் முதல்வர் ஜெயலலிதா பொய்ப் பிரசாரம் செய்து வருகிறார் என்று திமுக தலைவர்கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முரசொலி மாறன் இறந்த பிறகு என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர்வாஜ்பாய், மாறன் இடத்தில் யாரை அமைச்சராக்கலாம் என்று கேட்டார். அதுகுறித்து விவாதித்து பின்னர் தெரிவிப்பதாக நான்கூறினேன்.

பின்னர் மாறன் இறந்து ஒரு வாரம் கழித்து சென்னை வந்த வெங்கையா நாயுடுவும் பிரதமரின் கேள்வியை நினைவுபடுத்தினார்.அப்போதும் பின்னர் கூறுவதாக தெரிவித்துவிட்டேன்.

உண்மை இவ்வாறிருக்க தயாநிதி மாறனுக்கு நான் அமைச்சர் பதவி கேட்டதாகவும், அது கிடைக்காததால்தான் கூட்டணியைவிட்டு விலகியதாகவும், ஜெயலலிதா மற்றும் பா.ஜ.கவைச் சேர்ந்த குமாரவேலு ஆகியோர் கூறி வருகிறார்கள்.

இது திட்டமிட்ட பொய்ப் பிரசாரம் ஆகும். இதுகுறித்து சட்டப்பூர்வமாக நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவிவாதித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

ஏப்ரலில் -- 2வது கட்டப் பிரசாரம்:

இந் நிலையில் கருணாநிதியின் 2வது கட்ட தேர்தல் பிரசாரம் வரும் ஏப்ரல் 8ம் தேதி சென்னை சைதாப்பேட்டையிலிருந்துதொடங்குகிறது.

கடற்கரையிலிருந்து தொடங்கிய முதல் கட்டப் பிரசாரம் ஓசூரில் முடிவடைந்தது. தற்போது அவர் பெங்களூரில் தனது மகள்வீட்டில் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார். இரு நாட்களுக்கு முன்பே சென்னை திரும்ப இருந்த அவர் திட்டத்தைஒத்திவைத்துவிட்டு ஓய்வில் இருக்கிறார்.

ஏப்ரல் 8ம் தேதி அவர் தனது இரண்டாவது கட்டப் பிரசாரத்தைத் தொடங்குகிறார். தமிழகத்தின் மேற்குப் பகுதிகளில் பிரச்சாரம்செய்யும் கருணாநிதி, ஏப்ரல் 14ம் தேதி பொள்ளாச்சியில் நடக்கும் பொதுக் கூட்டத்துடன் 2வது கட்டப் பிரசாரத்தை முடிக்கிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X