காலார "நடந்துக்கினே" பிரசாரம்!
சென்னை:
தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளரான டி.ஆர்.பாலு தனது தேர்தல் பிரசாரத்தை பல வழிகளிலும் தீவிரமாக முடுக்கிவிட்டுள்ளார்.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தீவிர ஓட்டு வேட்டையாடிய அவர் தற்போது சென்னை நகருக்குள் நுழைந்துள்ளார். திமுகதொண்டர்கள் புடை சூழ ஒவ்வொரு பகுதியாக அவர் வலம் வந்து கொண்டுள்ளார்.
இந் நிலையில் சென்னையின் முக்கியப் பகுதியான மெரீனா கடற்கரையில் வாக்கிங் சென்றவாறே பிரசாரம் செய்தார் பாலு. டி சர்ட்,டிராக் சூட் சகிதம் தொண்டர்கள் புடை சூழ மெரீனா கடற்கரையில் கலங்கரை விளக்கம் பகுதியிலிருந்து அண்ணா சமாதி வரைநடந்து கொண்டே பிரசாரம் செய்தார்.
காலையில் ஜாகிங் வந்தவர்கள், வாக்கிங் வந்தவர்களுடன் ஜாலியாக பேசியவாறு அவர் வாக்கு சேகரித்தது பொதுமக்களின்வரவேற்பைப் பெற்றது. பலர் ராணி மேரிக் கல்லூரியைக் காப்பாற்றியதற்காக பாலுவுக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்துஅமைச்சர் பதவியை வகித்திருக்க வேண்டும் என்றும் சிலர் அவரிடம் உரிமையுடன் கோபித்துக் கொண்டனர்.
டி.ஆர்.பாலு வாக்கு சேகரிப்பதை அறிந்த பலரும் அங்கு வந்து அவருடன் கை குலுக்கிச் சென்றனர். இதேபோல, சில நாட்களுக்குமுன்பு பெசன்ட் நகர் எலியாட்ஸ் கடற்கரை பகுதியிலும், திருவான்மியூர்-கொட்டிவாக்கம் கடற்கரைப் பகுதியிலும் வாக்கிங்சென்றவாறே வாக்கு சேகரித்தார் டி.ஆர்.பாலு.












Click it and Unblock the Notifications