ரணில் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 3 தமிழர்கள் கொலை
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் கட்சி வேட்பாளர் உட்பட 3 தமிழர்கள் சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்து நலத் துறை அமைச்சரும், ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளருமான மகேஸ்வரன்,மட்டக்களப்பு அரசு அதிகாரி மெளனகுருசாமி ஆகியோர் கொழும்புவில் அடையாளம் தெரியாத நபர்களால்சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேறொரு சம்பவத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான மக்கள் குடியரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் சங்கரன்மட்டக்களப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த 3 கொலைகளையும் செய்தது யார் என்பது தெரியவில்லை. இது குறித்து இலங்கை போலீஸார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications