சென்னை, நாகர்கோவிலில் திடீர் மழை!
சென்னை:
கோடை வெயிலுக்கு இடையே திடீர்ஆச்சரியமாக சென்னை நகரில் இன்று காலை பரவலாக மழை பெய்தது. அதேபோலநாகர்கோவிலிலும் நல்ல மழை பெய்துள்ளது.
தமிழகத்தில் கடும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்களின் மண்டை காய்ந்து வெளியில் நடமாடவே பயமாகஉள்ளனர். குறிப்பாக வேலூர், சேலம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதிகளில் வெயில் கடுமையாக உள்ளது.
கடும் வெயிலுக்கு இதமாக தமிழகத்தில் ஆங்காங்கே சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந் நிலையில்மழையைப் பார்த்தே பல மாதங்கள் ஆகி விட்ட சென்னை நகரில் இன்று காலை திடீரென ஆங்காங்கே பரவலாக லேசான மழைபெய்தது. சில நிமிடங்கள் கூட நீடிக்காத நிலையில் பெய்து விட்டு ஓடி விட்டது இந்த திடீர் மழை.
சிறிது நேரமே பெய்தாலும் கூட மக்கள் மனதில் லேசான மகிழ்ச்சியும் எட்டிப் பார்த்தது. தொடர்ந்து இரு நாட்களுக்கு இதுபோலஅவ்வப்போது மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
இதேபோல, கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று காலை நல்ல மழை பெய்துள்ளது. குறிப்பாகநாகர்கோவில், தோவாளை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ந்துள்ளனர்.தொடர்ந்து 10 நாட்களுக்கு இவ்வாறு பெய்தால் குடிநீர்ப் பிரச்சினை தீரும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.