காந்திநகரில் வேட்பு மனு தாக்கல் செய்தார் அத்வானி
Subscribe to Oneindia Tamil
காந்திநகர்:
குஜராத் மாநிலத்திலுள்ள காந்திநகர் தொகுதியில் துணைப் பிரதமர் அத்வானி இன்று வேட்பு மனுத் தாக்கல்செய்தார்.
காந்திநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பிற்பகல் அவர் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். பின்னர்செய்தியாளர்களிடம் பேசிய அத்வானி கூறியதாவது:
பாபர் மசூதி தொடர்பாக இந்து மற்றும் முஸ்லீம் சமூகத்தாரிடையே இணக்கமான தீர்வை ஏற்படுத்தும் முயற்சிகளைபிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசு எடுத்து வருகிறது.
பா.ஜ.கவுக்கு எதிரான கட்சிகள் தங்களை வெறும் வாக்கு வங்கிகளாக மட்டும் பயன்படுத்தி வந்ததைசிறுபான்மையின மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் என்றார்.
இதனையடுத்து தனது இரண்டாம் கட்ட ரத யாத்திரையை போர்பந்தரில் இருந்து தொடங்குவதற்காக அங்குசெல்கிறார்.
காந்திநகர் தொகுதியில் 4வது முறையாக அத்வானி போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications