வெளிநாட்டவர்: சோனியாவுக்கு எதிரான பிரசாரத்துக்கு தடை கோரி வழக்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறி ஜெயலலிதா, வெங்கையா நாயுடு போன்றதலைவர்கள் பிரசாரம் செய்வதைத் தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக உழைக்கும் மக்கள் என்ற அமைப்பின் சார்பில் ஜான்சன் என்பவர் தொடர்ந்துள்ள வழக்கில்,சோனியா காந்தியை இந்தியர் என்று உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. மேலும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டமக்கள் பிரதிநிதியாக, பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார்.

இந் நிலையில் ஜெயலலிதா, வெங்கையா நாயுடு போன்றவர்கள், சோனியாவை வெளிநாட்டவர் என்று கூறிதேர்தல் பிரசாரம் செய்கிறார்கள். இது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.இருப்பினும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சோனியா காந்தியை வெளிநாட்டவர் என்று கூறி பிரசாரம் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றுகூறப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் எதிர் மனுதாரராக வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளைஅல்லது நாளை மறுநாள் விசாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+