வாசன் இன்று மீண்டும் டெல்லி பயணம்
சென்னை:
தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வதற்காக மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் இன்று மீண்டும்டெல்லி செல்கிறார்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதில் இரண்டு வேட்பாளர்கள் ஏற்கனவேஅறிவிக்கப்பட்டு விட்டனர். மற்ற 8 பேரை தேர்வு செய்வதில் பெரும் குழப்பம் நிலவுகிறது. இது தொடர்பானஆலோசனைக் கூட்டத்திலிருந்து ஜி.கே.வாசன் வெளிநடப்புச் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். பின்னர்டெல்லியிலிருந்து சென்னை திரும்பி விட்டார்.
இந் நிலையில் நாளை மீண்டும் டெல்லி செல்லவுள்ளார் வாசன். இது தொடர்பாக செய்தியாளர்களிடம்பேசுகையில், வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக டெல்லி சென்று மேலிடத் தலைவர்களுடன்ஆலோசனை நடத்தவுள்ளேன். 31ம் தேதிக்குள் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும்.
மேலிடத் தலைவர்கள் தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்வது குறித்தும் டெல்லியில் தலைவர்களுடன் ஆலோசனைநடத்த உள்ளேன்.
வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் போன்ற பேரியக்கத்தில் சில கருத்து வித்தியாசங்கள் ஏற்படுவது சகஜமானஒன்றுதான் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications