ரத்த அபிஷேகம் நடத்திய ரத்தத்தின் ரத்தம்; பரிகாரம் நடத்திய உடன் பிறப்புகள்!!
பண்ருட்டி:
காளியம்மன் கோவிலில் அதிமுகவைச் சேர்ந்த பெண் ரத்த அபிஷேகம் செய்து கோவிலை மாசுபடுத்தியதையடுத்துஅங்கு சிறப்புப் பரிகார பூஜைகள் நடத்தப்பட்டன.
பண்ருட்டி தட்டாஞ்சாவடியில் உள்ள இந்தக் கோவிலுக்குசில நாட்களுக்கு முன் அதிமுகவைச் சேர்ந்த சாந்தி என்றபெண் வந்தார். கையில் பாட்டில் வைத்திருந்தார். திடீரென பாட்டிலைத் திறந்த அவர் அதிலிருந்து ரத்தத்தைசிலையில் மீது ஊற்றினார்.
பக்தர்கள் அதிர்ச்சியுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அம்மாவின (ஜெயலலிதா) வெற்றிக்காக இந்தரத்த அபிஷேகம் செய்திருக்கிறேன் என்றார்.
அது தனது ரத்தம் என்று சாந்தி சொன்னாலும், ஆட்டு ரத்தமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ரத்தத்தைகோவிலில் தெளித்து அதன் புனிதத்தை சாந்தி கெடுத்துவிட்டதையடுத்து சிறப்பு பரிகார பூஜைகள் நடத்த கோவில்நிர்வாகிகள் முடிவு செய்தனர்.
இந்தக் கோவிலின் நிர்வாகிகளில் பெரும்பாலனவர்கள் திமுகவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், பரிகாரப் பூஜைகளும் நடந்தன. மேலும் ஆயிரக்கணக்கானபக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கிய திமுகவினர் அப்படியே அவர்களிடம் ஓட்டு வேட்டையும் நடத்தினர்.












Click it and Unblock the Notifications